மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மெரினா சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே ஆகிய படங்கள் ஹிட்டடித்ததால் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். அதோடு வளர்ந்து வரும் ஹீரோக்களின் விஜயசேதுபதியைப் போன்று சிவகார்த்திகேயனும் ஒரு முக்கியமான ஹீரோவாகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது அவர் காக்கி சட்டை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, ரஜினி முருகன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கயிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அப்படத்தை தயாரிக்கயிருந்த திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனம் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது.
அதாவது, தற்போது கமல் நடித்துள்ள உத்தம வில்லன், சீனுராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆனால், ஏற்கனவே அஞ்சான் படம் பெருத்த சறுக்கலை சந்தித்து கையை கடித்து விட்டதால், மேற்கொண்டு பணம் புரட்டி சிவகார்த்திகேயன் படத்தை எடுப்பதை விட, உத்தமவில்லன், இடம் பொருள் ஏவல் படங்களை ரிலீஸ் பண்ணி விட்டு அந்த பணத்தில் தயாரிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம்.
அதன் காரணமாகத் தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை உடனடியாக தொடங்காமல் அவர்கள் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி பிசியான நடிகரான சிவகார்த்திகேயன், அவர்கள் தயாராகி வருவது வரை பொறுமையாக காத்திருப்பாரா? இல்லை வேறு படத்தில் நடிக்கத் தொடங்கி விடுவாரா என்பது விரைவில் தெரியவரும்.