விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஐ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு, அப்படத்தின் டிரைலரை டம்மியாய் ரெடி பண்ணினார் இயக்குநர் ஷங்கர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், ஐ டிரைலரை பார்க்க விரும்பி இருக்கிறார். தயாரிப்பாளரில் விருப்பத்தை அறிந்து ஐ படத்தின் டிரைலரை ஆஸ்கார் ரவிக்கு அனுப்பி வைத்தார் ஷங்கர்.
ஐ டிரைலரை பார்த்து மிரண்டுபோன ஆஸ்கார் ரவி, உடனே தனக்கு நெருக்கமான நண்பர்கள் பலரையும் தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து ஐ படத்தின் டிரைலரை போட்டுக்காட்டி இருக்கிறார். அதோடு, ஆர்வமிகுதியில் சில பத்திரிகையாளர்களையும் அழைத்து அவர்களுக்கும் ஐ டிரைலரை காட்டி இருக்கிறார். அடுத்த கட்டமாக, ஃபேஸ்புக்கில் புழங்குகிற சிலரை அழைத்தும் ஐ டிரைலரை போட்டுக்காட்ட, அதில் யாரோ ஒருவர் ஆஸ்கார் ரவிக்கு தெரியாமலே அதை செல்போனில் பதிவு செய்து அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டனர்.
திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட டிரைலர் துல்லியமாக இல்லாவிட்டாலும், விக்ரம் பல தோற்றங்களில் வருவது அதில் நன்றாகவே தெரிகிறது. இந்த விஷயம் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் காதுக்கு வர கடும் கோபமாகிவிட்டதோடு, அதிர்ச்சியிலும் இருக்கின்றனர்.