மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் கமலஹாசன் இந்து மதத்தில் பிறந்தவர் என்றாலும், பகுத்தறிவு சிந்தனைவாதி. அதனால் நாத்திகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார், கமல். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கெளதமி நடிக்க மலையாளம் த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார்.
ஆரம்பத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், தூத்துக்குடி பகுதிகளில் நடந்து வந்த பாபநாசம் படப்பிடிப்பு தற்போது நாங்குனேரி பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தில் சில ஆன்மீக காட்சிகளும் உள்ளதாம். அதனால் அதை படமாக்க அங்கு அமைந்துள்ள ஸ்ரீவானமாமலை மடத்தில் உள்ள பெருமாள் கோயில் சரியாக இருக்கு என்று முடிவு செய்தாராம் கமல்.
அதையடுத்து, அந்த மடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு, ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுரை ஜீயரை சந்தித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டாராம். மடாதிபதியும் அனுமதி வழங்கினாராம். 5 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த கமலின் நெற்றியில் பெரிய விபூதி பட்டை போட்டிருந்தாராம்.
நாத்திகவாதி கமல், மடாதிபதியை சந்தித்ததோடு, நெற்றியில் விபூதி அணிந்து வந்ததால், கமல் ஆன்மீகத்துக்கு மாறி விட்டதாக நாங்குநேரி பகுதிகளில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறதாம்.