தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |
நடிகர் கமலஹாசன் இந்து மதத்தில் பிறந்தவர் என்றாலும், பகுத்தறிவு சிந்தனைவாதி. அதனால் நாத்திகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார், கமல். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கெளதமி நடிக்க மலையாளம் த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார்.
ஆரம்பத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், தூத்துக்குடி பகுதிகளில் நடந்து வந்த பாபநாசம் படப்பிடிப்பு தற்போது நாங்குனேரி பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தில் சில ஆன்மீக காட்சிகளும் உள்ளதாம். அதனால் அதை படமாக்க அங்கு அமைந்துள்ள ஸ்ரீவானமாமலை மடத்தில் உள்ள பெருமாள் கோயில் சரியாக இருக்கு என்று முடிவு செய்தாராம் கமல்.
அதையடுத்து, அந்த மடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு, ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுரை ஜீயரை சந்தித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டாராம். மடாதிபதியும் அனுமதி வழங்கினாராம். 5 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த கமலின் நெற்றியில் பெரிய விபூதி பட்டை போட்டிருந்தாராம்.
நாத்திகவாதி கமல், மடாதிபதியை சந்தித்ததோடு, நெற்றியில் விபூதி அணிந்து வந்ததால், கமல் ஆன்மீகத்துக்கு மாறி விட்டதாக நாங்குநேரி பகுதிகளில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறதாம்.