மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஏற்கனவே விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான நிறுவனம் தயாரித்திருப்பதால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. அதை சமாளிக்கவே விஜய், முருகதாஸ் இருவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இப்போது கத்தி படக்கதையே என்னுடையது. நான் எழுதிய மூத்த குடி என்ற கதையைத்தான் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தியாக மாற்றியிருக்கிறார் என்று மீஞ்சூரை சேர்ந்த கோபி என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதனால் ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதென்று இப்போது இந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் முருகதாஸ்.
இதுபற்றி மீஞ்சூர் கோபியின் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது- டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு படம் இயக்குவதற்காக முருகதாஸிடம் மூத்த குடி என்றொரு கதையை சொன்னேன். அதைக்கேட்ட அவர், அதை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாக மாற்ற சொன்னார். நானும் ஒன்றரை ஆண்டுகளாக அதை மாற்றும் பணியில் இருந்தேன்.
அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸை அணுகியபோது இப்போது அந்த படத்தை தயாரிக்க முடியாது என்று ஒதுங்கி விட்டார். இந்த நேரத்தில்தான் விஜய்யை வைத்து இரண்டு வேடங்களில் அவர் கத்தி என்றொரு படத்தை இயக்கும் விசயம் எனக்கு தெரியவந்தது. அதனால் அந்த கதை என்னவாக இருக்கும் என்று நான் அப்படக்குழுவின் பணியாற்றிய சிலரிடம் விசாரித்தபோதுதான் அது என் கதை என்பது எனக்கு தெரியவந்தது.
ஆகவே, நீதிமன்றம் இந்த விசயத்தில் தலையிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு கத்தி படம் திரைக்கு வருவதற்கு முன்பு என் கதையை பயன்படுத்தியதற்கான நிவாரணத்தையும் வாங்கி தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ், மீஞ்சூர் கோபி ஆகிய இருவரிடமும் அவர்களது கதையின் நகலை கோர்ட் கேட்டுள்ளது. அவர்கள் தங்களது கதைகளை வழங்கிய பிறகு அதை ஆராய்ந்த பின்னர் இதுபற்றிய முடிவு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது, ஆக,முருகதாஸின் கத்தி படம் சுட்ட பழமா? சுடாத பழமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.