'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர், அடுத்து அமரகாவியம் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்க, ஆர்யாவே இப்படத்தை தனது தம்பிக்காக பிரமாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து நடிகை நயன்தாராவே கண் கலங்கினார். அந்தளவுக்கு படத்தின் கதைக்களம் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருக்கும் என்று இப்போதே அனைவரும் நம்புகின்றனர்.
இந்நிலையில், அமரகாவியம் படத்திற்கு பிறகு மீண்டும் ஜீவா சங்கரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் ஆர்யா. இதனை இயக்குநர் ஜீவா சங்கரும் உறுதி செய்திருக்கிறார். இதில் யார் நடிப்பார்கள் என என்னால் இப்போது உறுதி சொல்ல முடியாது. ஆர்யாவா அல்லது அவரது தம்பி சத்யாவா என்பதை கதை தான் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.