விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அஞ்சலியின் சித்தி பாரதிதேவியின் மகன் திருமணத்திற்காக உதவியாளர்களுடன் காரில் ஐதராபாத்திற்கு சென்ற இயக்குனர் களஞ்சியத்தின் கார் விபத்துக்குள்ளானதில் அவரது உதவியாளர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் களஞ்சியம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உயிரை காப்பாற்ற உதவி செய்யுமாறு களஞ்சியத்தின் நண்பர்கள் அஞ்சலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: எங்கள் நண்பர் இயக்குனர் களஞ்சியத்திற்கு உடம்பு முழுவதும் பலத்த அடிபட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லை. யாரை பார்த்தாலும் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே மனதில் நிலைக்கிறது. மற்றபடி யார் என்ன என்பது பற்றிய உணர்வு ஏற்படுத்தவில்லை, அப்போதைக்கப்போது கண் விழிக்கிறார்.
இன்னும் எவ்வளவு காலம் சிகிச்சையில் இருப்பார் என்பது தெரியவில்லை. அஞ்சலி நடித்த ஊர்சுற்றிப் புராணம் படம் வேறு பாதியில் நிற்கிறது. சிகிச்சைக்காக யாரிடம் போய் உதவி கேட்டாலும் ஏற்கெனவே படத்திற்காக கொடுத்த பணம் என்ன ஆச்சு? என்று உதவ மறுக்கிறார்கள். அதுவேறு இல்லாமல் களஞ்சியத்தின் உடல் நிலையை காரணம் காட்டி சிலர் கடனைக் கேட்டு நெருக்குகிறார்கள்.இந்த நெருக்கடியான சூழ்நிலையை மனதில் வைத்து அஞ்சலி பணத்தை திருப்பி கொடுத்தால் களஞ்சியத்தின் உயிர் காக்க முடியும். இதற்கான முயற்சியில் திரைப்பட சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு உயிர் இழப்புக்கு காரணமாக வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.