விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி சயனைட் படத்தை இயக்கிய கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் வனயுத்தம் என்ற பெயரில் எடுத்தார். அதற்கு முன்பு வ.கவுதம் சந்தனக்காடு என்ற பெயரில் தொலைக்காட்சி தொடரை இயக்கினார். தற்போது முத்துலட்சுமி என்ற பெயரில் கன்னடத்தில் தயாராகி வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு ஆர்.கே.செல்வமணி கேப்டன் பிரபாகரன் எடுத்தார். அதன் பிறகும் வீரப்பனை விடுதாக இல்லை.
மது என்பவர் இலக்கு என்ற பெயரில் மீண்டும் வீரப்பன் கதையை படமாக எடுக்கிறார். இவர் அயோத்தியா குப்பம் வீரமணி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பெருசு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர். வழக்கறிஞராகவும், கராத்தே மாஸ்டராகவும் இருக்கிறார்.
தான் இயக்கும் இலக்கு படம் பற்றி அவர் கூறியதாவது: சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி வந்த படங்கள் அனைத்திலும் அவனது வீரதீர சாகசங்கள் பற்றித்தான் வந்தது. ஆனால் அவனால் உயிரிழந்த, குடும்பத்தை இழந்த போலீஸ் அதிகாரிகளின் தியாகம் பற்றி வரவில்லை. இந்தப் படம் அந்த பகுதியை சொல்லும் படம். போலீஸ் அதிகாரி விஜயகுமாராக நான் நடிக்கிறேன். ஸ்ரீரில் தாமஸ் என்ற கராத்தே மாஸ்டர் வீரப்பனாக நடிக்கிறார். களவாணி படத்தில் நடித்த தேவி ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைக்கிறார். ராமநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆந்திரா பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். விரையில் திரையிட இருக்கிறோம். என்றார் மது.