விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அம்புலி என்ற திகில் 3டி படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஹரி-ஹரீஷ் இருவரும் தற்போது ஆ என்ற திகில் படத்தை எடுத்து வருகிறார்கள். பயம் வந்தால் கத்தும் ஒலியையே படத்தின் டைட்டிலாக்கியர்கள் அதன் பாடல் வெளியீட்டு விழாவையும் வித்தியாசமாக நடத்த விரும்பினார்கள். திகில் படம் என்றால் பேய், நள்ளிரவு சகஜம். அதனால் பாடல்களை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட முடிவு செய்தார்கள். விழாவாக வைத்தால் கூட்டம் சேராது என்பதால் ஒரு தனியார் ரேடியோவில் நேற்று (ஜூலை 11) நள்ளிரவில் ஆ வின் பாடல்களை வெளியிட்டனர். வெள்ளிக்கிழமை இரவில்தான் பேய்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமையை தேர்வு செய்தனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் கூறியதாவது: ஒரு படத்தை ஈசியாக எடுத்து விடலாம் அதற்கு விளம்பரம் செய்தவற்குத்தான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கிறது. படத்தின் தலைப்பை போலவே பாடல் வெளியீடும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் நள்ளிரவை தேர்ந்தெடுத்தோம். உலகத்திலேயே நள்ளிரவில் பாடல்களை வெளியிட்டது நாங்களாத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம். என்றார்கள்.
இந்தப் படத்தில் அம்புலி கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, பாலா நடிக்கிறார்கள். வெங்கட்பிரபு சங்கர் இசை அமைத்துள்ளார். இயக்குனர்களே ஒளிப்பதிவும் செய்துள்ளனர்.