விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சாமியார் நித்தியானந்தருடன் உல்லாசமாக இருந்த நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நடிகை ரஞ்சிதாவும், சாமியார் நித்தியானந்தாவும் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த மாதம் வெளியானது. இதையடுத்து நடிகை ரஞ்சிதா தலைமறைவாகி விட்டார். சாமியார் நித்தியானந்தா மட்டும், தான் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால் அவரும் இதுவரை வெளியில் தலை காட்டவில்லை.
இந்நிலையில் சாமியாருடன் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்த ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் மனோகரன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஆன்மீகப் பணிகளில் பிரபலமான நித்யானந்தா சாமியாருடன் பிரபல நடிகை ரஞ்சிதா படுக்கையில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியாயின. நித்யானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கும் படங்கள் பத்திரிகைகளிலும் வெளியானது. இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற ஆபாச காட்சிகள் மக்கள் மனதை கெடுக்கக் கூடியதாகும். இளைய தலைமுறையினரும், பெண்களும் சமுதாய சீரழிவில் சிக்கிவிட இது காரணமாக அமையலாம். எனவே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட நடிகை ரஞ்சிதா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் தபால் மூலம் புகார் கொடுத்தேன். ஆனால், போலீஸ் கமிஷனர் என் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நடிகை ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.