மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் இசைவெளியீட்டுவிழா வரும் 22 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இந்த விழாவை முதலில் சத்யம் தியேட்டரில்தான் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். சிங்கம்-2 படத்தின் இசைவெளியீட்டுவிழா டிரேட் சென்டரில்தான் நடத்தப்பட்டது. சிங்கம்-2 மிகப்பெரிய வெற்றியடைந்ததினால் அந்த சென்ட்டிமெண்ட் காரணமாகவே அஞ்சான் படத்தின் இசைவெளியீட்டுவிழாவையும் டிரேட் சென்டரில்தான் நடத்த வேண்டும் என்று சூர்யா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம். அது மட்டுமல்ல, தன் ரசிகர் மன்றங்களை வலிமையான இயக்கமாக மாற்ற திட்டமிட்டுள்ள சூர்யா, அஞ்சான் படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களை திரட்டவும் திட்டமிட்டிருக்கிறார். வெளியூரிலிருந்து எல்லாம் லாரி மற்றும் வேன்களில் வந்திறங்கும் ரசிகர்களை சத்யம் தியேட்டரில் விழா நடத்தினால் சமாளிக்க முடியாது என்பதால்தான் டிரேட் சென்டரை தேர்வு செய்தனராம்.
தன்னுடைய படத்தின் இசைவெளியீட்டை தன் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும், அதைக் காண்கிற தன் ரசிகன் சந்தோஷப்பட வேண்டும் என்று சூர்யா நினைப்பது மிகவும் நியாயமான விஷயம். தயாரிப்பாளர்களின் எண்ணமோ சூர்யாவின் எண்ணத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. சூர்யாவின் ரசிகர்களால், அஞ்சான் இசைவெளியீட்டுவிழாவுக்கு இடையூறு ஏதும் வந்துவிடக் கூடாது என்பதால், அவர்களை சமாளிக்க 50க்கும் மேற்பட்ட பவுண்சர்களை ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு பவுண்சர் சப்ளையரிடம் அஞ்சான் விழாவுக்கு ஆட்களைக் கேட்டிருக்கின்றனர். அவர்கள் ஜிம் மற்றும் கல்லூரிகளில் புகுந்து புறப்பட்டு வாட்டசாட்டமான ஆட்களை...பவுண்சர் வேலைக்காக தேடி வருகிறார்கள்.