விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்து பல மாதங்களாகிவிட்டன. அந்தப்படத்தில் பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தவிர அப்படம் பற்றி வேறு செய்தி இல்லை. தற்போது வெங்கட்பிரபுவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. வெங்கட் பிரபு - சூர்யா முதன் முறையாக இணைய உன்ன அந்தப்ம் படத்திற்கு 'பூச்சாண்டி' என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜாதான் இசையமைக்கிறார்.
பூச்சாண்டி படத்தில் சூர்யாவுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர்.. நயன்தாரா, மற்றொருவர் எமி ஜாக்சன். ஆதவன் படத்துக்குப் பிறகு சூர்யாவும் நயன்தாராவும் இந்தப்படத்தில் இணைகிறார்கள். ராத்திரியானால் பார்ட்டி பண்ணுவதை வழக்கமாக வைத்திருந்த வெங்கட்பிரபு பூச்சாண்டி படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவதற்காக கடந்த சில மாதங்களாக பாண்டிச்சேரி சென்று அங்குள்ள மதர் ஆசிரமத்தில் தங்கி ஸ்கிரிப்ட் வொர்க்கை முடித்துவிட்டு வந்திருக்கிறார்.
ஆமா..அதென்ன பூச்சாண்டி? ஜாலியான பேய்ப்படமாம். பேய் யாரு நயன்தாராவா?