விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார், ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜானி, கை கொடுக்கும் கை, காளி, மன்னன், வெற்றி விழா, சூரியன், உல்லாசப் பறவைகள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர், அசோக்குமார், 72. அவர், காமாக்னி, அன்று பெய்த மழை படங்களையும் இயக்கியுள்ளார். நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது உட்பட, தமிழகம், ஆந்திரா, கேரள மாநில விருதுகளும் பெற்றுள்ளார்.கடந்த ஆண்டு, டிசம்பரில், ஐதராபாத் சென்றிருந்தபோது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின், சென்னையில் வீட்டிலிருந்தவருக்கு, கடந்த மாதம் மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. சென்னை, காட்டாங்கொளத்தூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆபத்தான நிலையில், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.