மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த மாதம்தான் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதை கசிந்தது. வில்லனாக நடிக்கும் விஜய் 90 பேரை பிணய கைதிகளாக கடத்தி வைத்துக்கொள்ள, அவரிடமிருந்து ஹீரோ விஜய் அந்த பிணயக்கைதிகளை மீட்பது போன்று அப்படத்தின் கதை கசிந்தது.
அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் கதையும் இப்போது பேஸ்புக் மூலமாக கசிந்துள்ளது. அதாவது, கதைப்படி சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சில மர்ம நபர்களால் த்ரிஷா கொல்லபபடுவாராம். அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக செய்தார்கள் என்பதைத்தான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜீத் புலனாய்வு செய்து கண்டு பிடிப்பாராம். இதில் அஜீத்துக்கு உதவி செய்வது போன்று அனுஷ்காவின் கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த தகவலை சீக்ரெட்டாக வைத்திருந்த கெளதம்மேனன், மீடியாக்களைகூட சந்திக்காமல் இருந்தார். ஆனால், அவருடன் இருந்த யாரோ ஒருவர்தான் இந்த கதையை பேஸ்புக்கில் வெளியிட்டு விட்டாராம். இதனால் கடும் கோபத்துக்கு ஆளான கெளதம்மேனன் இப்போது அந்த நபரை தனது டீமில் இருந்தே வெளியேற்றி விட்டாராம்.