மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திலீப்பை விவாகரத்து செய்த மஞ்சுவாரியர் சினிமாவில் நடிக்க முழுவீச்சில் கதை கேட்கத் தொடங்கி விட்டார். முன்னதாக, தான் திருமணமான அறிகுறியே தனது உடம்பில் இல்லாத அளவுக்கு உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றியிருக்கும் மஞ்சுவாரியர், இப்போது முன்பு மாதிரி மலையாள சினிமாவையே சுற்றி வராமல், தென்னிந்திய சினிமாவில் பரவலாக நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
அதனால், மலையாளத்தில் பல கதைகள் கேட்டவர், மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்க மட்டுமே ஓ.கே செய்திருக்கிறார். அதையடுத்து, தெலுங்கில் நானியுடன் ஒரு படத்தில் கமிட்டாகி விட்டவர், தமிழையும் விடவில்லை. சில அபிமான டைரக்டர்களை சந்தித்து தனது மறுபிரவேசம் குறித்து தகவல் கொடுத்து, படவேட்டையில் ஈடுபட்டார்.
அதன்காரணமாக, தற்போது அஞ்சான் படத்தை முடித்துள்ள சூர்யா, அடுத்து நடிக்கும் படத்தில் மஞ்சுவாரியருக்கு கதாநாயகி வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். கோலிவுட் நடிகைகளை மாதிரி குத்தாட்ட கோதாவில் இறங்காத அவர், வித்தியாசமான, வெயிட்டான கதாபாத்திரங்களில் மட்டுமே வழக்கம்போல் நடிப்பேன் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருப்பதோடு, இப்போதைக்கு எனக்கு தேவை நல்ல படம். அதேசமயம், சம்பள விசயத்தில் எப்போதும் போல் நான் அடக்கம்தான் என்று குறைவான சம்பளத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
இதனால் குறைவான கூலியில், பெரிய நடிகை கிடைத்து விட்டார் என்று சில படாதிபதிகள் மஞ்சுவாரியரை வட்டம் போட தொடங்கியிருக்கிறார்கள்.