மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரஜினியின் நடிப்பில், அவரது இரண்டாவது மகள் இயக்குநராக களம் இறங்கியுள்ள படம் கோச்சடையான். இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் படங்களில் உருவான மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில், அனிமேஷன் படமாக இப்படம் தயாராகியுள்ளது. ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ருக்மணி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம், ஐந்து முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்நிலையில் இன்று மே 9ம் தேதி படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கூடுதல் பிரிண்ட் போட இருப்பதாலும், அனிமேஷன் வேலைகள் இருப்பதாலும் படத்தை மே 23ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக படக்குழு தெரிவித்தது. ஆனால் உண்மையான காரணம் அது இல்லை என்றும், படம் அதிகபட்ஜெட்டில் உருவாகி இருப்பதால் படத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வாங்க மறுப்பதால் படம் தள்ளிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கோச்சடையான் படம் கோடையை கோட்டை விட்டுள்ளது. எப்படி? கோச்சடையான், அனிமேஷன் படம் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக அனிமேஷன் படங்களுக்கு குழந்தைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தற்போது பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் குழந்தைகள் மத்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும். ஆனால் பல்வேறு பிரச்னைகளால் இப்படம் தள்ளிப்போய் மே இறுதியில் ரிலீஸாக இருக்கிறது. அதன்பிறகு ஒரு வாரத்தில் பள்ளிகளும் திறக்க இருக்கிறது. இதனால் பெரிய கலெக்ஷ்ன் எதுவும் இருக்காது. ஆக இந்த கோடையை முழுமையாக கோட்டை விட்டுள்ளது கோச்சடையான்.
அதேசமயம் இந்த கோடையை சரியாக பயன்படுத்தியுள்ளார் சந்தானம். கோச்சடையான் படம் பின் வாங்கியதை தொடர்ந்து உடனடியாக தனது படத்தை நாளை(மே 10ம் தேதி) ரிலீஸ் செய்ய இருக்கிறார். பொதுவாக சந்தானம் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பதால் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை முழுமையாக கவரும் என தெரிகிறது. மேலும் இதனூடையே அடுத்தடுத்து, சைவம், எட்டுத்திக்கும் மதயானை உள்ளிட்ட சின்ன பட்ஜெட் படங்களும் ரிலீஸாகின்றன.