மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கதிற்குள் கோஷ்டி மோதல்களும், அணி மாற்றங்ளும், கோர்ட் வழக்குகளும், தடைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தொடர் வழக்குகள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிர்வாகிகள் தேர்தலில் கேயார் தலைமையிலான அணியினர் பெரும் வெற்றி பெற்றனர். ஆனால் தோற்ற கலைப்புலி எஸ்.தாணு தேர்தலில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர்ந்தார். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். இதில் தேர்தல் முறைகேடு உள்ளிட் சில வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம். முன்னாள் நீதிபதி ஒருவர் முன்னிலையில் பொதுக்குழவை கூட்ட வேண்டும் என்றும். அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
பொதுக்குழு
நீதிமன்ற உத்தரவுப்படி வருகிற 11ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பொதுக்குழு -கூடுகிறது. தற்போது கேயார் அணியில் இருந்த செயலாளர் டி.சிவா, துணை தலைவர் டி.ஜி.தியாகராஜன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாணு அணிக்குச் சென்று விட்டனர். இதனால் கேயார் அணிக்கு நிகரான பலத்தை தாணு அணியும் பெற்ற விட்டதாக கூறப்படுகிறது.
மோதல் அபாயம்
நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் போட்டியும், விவாதங்களும் காரசாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வேகமாக தயாரித்து வருகிறார்கள். பொதுக்குழுவின் போது பிரச்னை ஏற்படாலம் எதிர் அணியினர் குழப்பம் விளைவிக்கலாம், கைகலப்புகூட ஏற்படலாம் என்று தற்போதைய தலைவர் கேயார் போலீஸ் கமிஷனரை சந்தித்து பாதுகாப்பு கேட்டுள்ளார். "எங்கள் மீது கொண்டுவர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க இந்த பொதுக்குழுவை கூட்டியிருக்கிறோம். எங்களுக்கு 400 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது" என்று கூறியிருக்கிறார் கேயார்.
கவர்ச்சி திட்டம்
தாணு அணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 11ந் தேதி நடக்க உள்ள பொதுக்குழவில் கொண்டுவரப்பட இருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க சங்க நிர்வாகிகள் குறுக்கு வழியில் செயல்பட்டு வருகிறார்கள். கேபிள் டி.வி.வருமானத்தில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தருவோம் என்று உறுப்பினர்களுக்கு ஆசை காட்டுகிறார்கள். அப்படிப் பார்த்தால் 832 உறுப்பினர்களுக்கு 3 மாதத்திற்கு 2 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரம் வேண்டும். அந்தளவுக்கு வருமானம் கேபிள் டி.வியில் கிடையாது. இது வெறும் கண்துடைப்பு திட்டம்.
நாங்கள் உறுப்பினர்களுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்து செயலாற்ற நினைக்கிறோம். பொதுக்குழுவில் சிந்தித்து செயலாற்றுமாறு உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறோம். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
எகிறும் படத்தின் தயாரிப்பு செலவுகள், அதிக எண்ணிக்கையில் தயாராகும் படங்கள், தியேட்டர் தட்டுப்பாடு, வரிவிலக்கில் பாரபட்சம் என பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமா, தயாரிப்பாளர் சங்கம் கோஷ்டி சண்டைகளை நிறுத்தி நல்ல முறையில் செயல்பட ஆரம்பிக்குமா என்று கவலையோடு காத்திருக்கிறது.