விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பொன்னிவள வீர சரித்திரம் என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கு நடிகர் சிவகுமார் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தையும், பொற்கொல்லர் சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் சில வசனங்களை பேசியிருப்பதாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகார் குறித்து சிவகுமார் கூறியிருப்பதாவது: சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் பகுதியில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை கொண்ட புதினம் இது. கனடாவைச் சேர்ந்த பிருந்தா பெக் என்ற பெண், கரூர் பகுதியில் 2 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இதனை உருவாக்கி உள்ளார். இதற்காக பிருந்தா பெக்கிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். பிருந்தா சிரம்மேற்கொண்டு செய்த பணிக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்திருக்கிறேன். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சில நிமிட நேர குரல்பதிவு கொடுத்திருக்கிறேன்.
இந்த விஷயத்தை ஜாதி பிரச்னையாக்குவது வெளிநாட்டிலிருந்து வந்து அந்த பெண் செய்திருக்கும் மகத்தான காரியத்தை கொச்சைப்படுத்துவதாகும். ஜாதி உணர்வுகளுக்கெல்லாம அப்பாற்பட்டவன் நான். என் குழந்தைகளுக்கு வெவ்வேறு ஜாதியில் மணம் முடித்திருக்கிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தை கடைபிடித்து வாழ்கிறவன் நான்.
இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.