நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? |
கற்றது தமிழ் படத்தில் இயக்குனரானவர் ராம். அதையடுத்து தங்கமீன்கள் படத்தை இயக்கியவர் இப்போது தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தங்க மீன்கள் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ராம்.
இந்நிலையில், ஒரு படம் ஓடுவதை வைத்துதான் அது சிறந்த படம் என்று யாருமே நினைப்பதில்லை. அந்த படத்தின் கதை அவர்களை பாதித்திருந்தால் எந்த காலத்திலும் அந்த படத்தைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில், தங்க மீன்கள் படம் பெரிய வசூல் இல்லை என்றாலும், படம் மக்களை பெரிதாக பாதித்திருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக மேடைகளில் இந்த படம் பற்றி பேசுகிறார்கள். மீடியாக்களில் இந்த படத்தை பல இடங்களில் மேற்கோள் காட்டுகிறார்கள். ஆக, தங்கமீன்கள் மக்களை பெரிதும் கவர்ந்த படமாகியிருக்கிறது என்கிறார்.
மேலும், இந்த தங்க மீன்கள் படத்தில் அப்பா-மகளுக்கிடையிலான உறவை பற்றி படமெடுத்த எனக்கு அடுத்து ஒரு தாய்-மகனுக்கிடையிலான கதையை படமாக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால் பேரறிவாளனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் அவரது தாயின் போராட்டம் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதனால் அந்த அற்புதம் அம்மாள்-பேரறிவாளனை மையமாக வைத்து அடுத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறும் ராம், தரமணி முடிந்ததும் அந்த கதையை படமாக்குகிறாராம்.
ஆக, ஒரு பரபரப்பான படைப்பை கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் டைரக்டர் ராம்.