விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ் நடிகை ரோஜா ஆந்திராவில் அரசியல் செய்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திர சட்டமன்றத்திற்கு நடக்கும் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கெனவே இதே தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற ரோஜா இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று (மே 2) நகரியை அடுத்த சந்திரவாடாவில் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்தார். இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் வீடுவீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். கடும் வெயிலை தாங்க முடியாத ரோஜா தெருவில் நடந்து செல்லும்போதே மயங்கி விழுந்தார். உடனே கட்சி நிர்வாகிகள் அவரை அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்துவிட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தனர். வெயிலின் கொடுமை காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் மயங்கி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்கான சிகிச்சையை பெற்றுகொண்ட ரோஜா. 3 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்த ரோஜாவின் சின்னம் மின் விசிறி.