மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டு சில வருடங்களுக்கு அரிதாரம் பூசினார் பாடலாசிரியர் பா.விஜய். ரஷ்ய எழுத்தாளர் மக்ஸீம் கார்க்கியின் தாய் நாவலை தழுவி, மு.கருணாநிதி எழுதிய தாய் காவியம் கதையை அதே பெயரில் படமாக எடுத்தனர். அந்தப் படத்தில்தான் கதாநாயகனாக நடித்தார் பா.விஜய். பிறகு அந்தப் படமே ட்ராப்பானது. பிறகு ஞாபகங்கள் என்ற படத்தை தானே தயாரித்து ஹீரோவாக நடித்தார் பா. விஜய். அந்தப் படமும் படு தோல்வி. அடுத்து, லாட்டரி வியாபரி மார்ட்டின் பல கோடிகளைக் கொட்டி எடுத்த இளைஞன் என்ற படத்தில் பா. விஜய் நடித்தார். இந்தப்படமும் தோல்வி.
இதற்கிடையில், கதாநாயகன் கனவில் பாட்டெழுதுவதை பார்ட் டைம் தொழிலாக்கிய பா.விஜய்யை பட உலகமே மறந்துபோனது. நடித்த படங்கள் தோல்வியடையவே, நடிக்கும் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டு மீண்டும் பாட்டெழுத வந்தார் பா.விஜய். ஆனால் பா.விஜய்க்கு பழைய மவுசு இல்லை. பாட்டுக்கோட்டையை நா.முத்துக்குமாரும், கார்க்கியும் கைப்பற்றி இருந்தனர்.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக...நடிப்பை நம்பி பாட்டு எழுதுவதை மறந்த பா.விஜய்க்கு இப்போது, மீண்டும் ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்துவிட்டது. இம்முறை தனக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையை புக் பண்ண வேண்டும் என்று தீர்மானித்து தனக்கு தெரிந்த இயக்குநர்கள் மூலம் பல முன்னணி நடிகைகளுக்கு தூதுவிட்டு பார்த்தார். பா.விஜய்க்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் யாரும் தயாராக இல்லை. கடைசியில் என்னமோ ஏதோ படத்தில் நடித்த நிகிஷா பட்டேலை தனக்கு ஜோடியாக்கிவிட்டார் பா.விஜய்.