விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஷால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. அங்கு மார்க்கெட் ஷெட் போட்டு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தனது குழுவினருடன் எடுத்து வருகிறார்.
நேற்று (ஏப்ரல் 28) காலை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சண்டை கலைஞர் ஓருவரை விஷால் -ஓங்கி கன்னத்தில் அறைவது மாதிரி காட்சி. முதலில் விஷால் லேசாக அறைந்தார். உடனே கனல் கண்ணன், "அவனுக்கு வலிக்கும்னு யோசிக்காதீங்க. அவன் தாங்குவான். அதுக்கான பயிற்சி எடுத்திருக்கான் நிஜமாவே ஓங்கி அடிங்க அப்பதான் காட்சி யதார்த்தமா இருக்கும்" என்று சொல்ல... விஷாலும் அப்படியே செய்ய துணிந்தார். படமாகிக்கொண்டிருக்கும்போது விஷாலின் நிஜ வேகத்தை பார்த்த ஸ்டண்ட் கலைஞர் விலகிக் கொள்ள வேகமாக ஓங்கிய கை அங்கிருந்து ஒரு பழைய தகரத்தின் மீது மோத கை விரல்கள் கிழிந்து ரத்தம் கொட்டியது.
வேகமாக ஓடிவந்த மற்ற ஸ்டண்ட் கலைஞர்கள் விஷாலை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிழிந்து தொங்கிய கை விரல்களை ஒட்டவைத்து 14 தையல்கள் போடப்பட்டது. ஒரு வாரத்துக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டதால் அதுவரை படப்பிடிப்பை ஒத்தி வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.