மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இன்றைய சூழலில் படத்தை தயாரிப்பதைவிட, அதை விளம்பரம் செய்து ரிலீஸ் பண்ணுவதுதான் பெரிய தலைவலி. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஓய்ந்துவிட்டநிலையில், ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து படங்களை தயாரித்து வருகின்றன. அவற்றில் ஒன்று..லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம். படத்தை தானே ரிலீஸ் பண்ணினால் சிக்கல் என்பதை உணர்ந்து, தான் தயாரிக்கும் அனைத்துப் படங்களையும் தானே ரிலீஸ் பண்ணி ரிஸ்க் எடுக்க விரும்பாமல், அப்படியே யுடிவி நிறுவனத்துக்கு கை மாற்றிவிட்டுவிடுகிறார் லிங்குசாமி.
அவர் தயாரித்து இப்படி கை மாற்றிய வேட்டை, இவன் வேற மாதிரி ஆகிய படங்கள் சரியாகப் போகாததினால் யுடிவிக்கு பல கோடிகள் நஷ்டம். ஆனால் லிங்குசாமிக்கோ நயாபைசா நஷ்டமில்லை. மாறாக சில கோடிகள்தான் லாபம்தான். இந்த ஃபார்முலாவில் பிசினஸ் பண்ணி ஒவ்வொரு படத்திலும் கோடிக்கணக்கில் லாபம் பார்த்து ருசி கண்டுவிட்டார் லிங்குசாமி. எனவே, தற்போது சூர்யாவை வைத்து தயாரித்து இயக்கிவரும் அஞ்சான் படத்தையும் பெரும் தொகைக்கு யுடிவி நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்.
இந்த டீலில் பல கோடிக்குமேல் லிங்குசாமிக்கு லாபமாம். அதுமட்டுமல்ல, அடுத்து கார்த்தியை வைத்து தயாரித்த இயக்கும் எண்ணி ஏழு நாள் படத்தையும் யுடிவி நிறுவனத்துக்கே தருவதாக கூறி இருக்கிறாராம். மொத்தத்தில், யுடிவி நிறுவனத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டார் லிங்குசாமி.