மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாக, அஜித்தைப் பார்த்து நடிகர் ஜெய்யும் மாறிவிட்டார். நடிகராக அறிமுகமான ஆரம்பகாலங்களில் மீடியா ஆட்களைக் கண்டால் அநியாயத்துக்கு பவ்யம் காட்டுவார். தன்னைப் பற்றி எழுதும்படி கூசாமல் கேட்பார். இப்போது ஓரளவு வளர்ந்துவிட்டார். நயன்தாரா உடன் ஜோடிபோடும் அளவுக்கு அவரது ஸ்டேட்டஸ் உயர்ந்துவிட்டது. எனவே மீடியாக்களை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். அதாவது, தான் நடிக்கும் படத்தின் இசைவெளியீட்டுவிழா, புரமோஷன் போன்ற எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை என்பதை பாலிஸியாக வைத்திருக்கிறாராம்.
அதன்படியே அவர் தற்போது நடித்து வரும் திருமணம் எனும் நிக்காஹ், வடகறி படங்களின் இசைவெளியீட்டுக்கு ஜெய் வரவே இல்லை! ஜெய்யின் இந்த போக்கு அவர் மீது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஒன்றிரண்டு படங்களில் நடித்தநிலையிலேயே தன்னை அஜித்தாக நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர். இது ஜெய்யின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள்.
ஜெய் அப்படிப்பட்டவர் அல்ல, அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் மீடியாக்களைக் கண்டாலே அவருக்கு அலர்ஜியாக இருக்கிறது என்கிறது ஜெய்யின் நட்பு வட்டாரம்.