மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் மா.பா.க ஆனந்த். வானவராயன் வல்வராயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் வெளிவருவதற்கு முன்பே பஞ்சுமிட்டாய் படத்தின் மூலம் சோலோ ஹீரோவாகியிருக்கிறார். இன்னும் இரண்டு படங்களில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார். இனி அவர் சின்னத்திரை பக்கம் வரமாட்டார் என்ற பேச்சு இருக்கிறது.
இதுபற்றி மா.கா.பா.ஆனந்த் கூறியதாவது: வானவராயன் வல்லவராயன் காமெடி படம், பஞ்சுமிட்டாய் பேண்டஸியான படம். நாளைய இயக்குனர் போட்டியில் ஷங்கர் சாரால் பாராட்டப்பட்ட கலர்ஸ் என்ற குறும்படம்தான் பஞ்சுமிட்டாயாக மாறியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த நிகிலா ஹீரோயின். இந்த படமும் முடியுற நிலையில் இருக்கு. கதைக்கு முக்கியத்தும் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். என் மீதான் கதை நகர வேண்டும் என்றில்லை. என்னை சுற்றி கதை நகர்ந்தால் போதும்.
எவ்வளவு பெரிய நடிகன் ஆனாலும் வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. என் குரலை ஏற்றுக்கொண்ட பண்பலை, என் முகத்தை ஏற்றுக் கொண்ட சின்னத்திரை என் வாழ்நாள் முழுக்க இந்த இரண்டையும் மறக்கவும் மாட்டேன். விட்டு விலகவும் மாட்டேன். ஏதோ ஒரு வகையில் இந்த இரண்டும் என் பயணத்தில் இருந்து கொண்டே இருக்கும் என்கிறார் ஆனந்த்.