ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
விஜய் நடித்த துப்பாக்கி, தற்போது சூர்யா நடிக்கும் அஞ்சான் உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் சதோஷ்சிவன். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் இனம். இத்திரைப்படம் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளதாக தமிழ் ஆர்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இனம் படத்தினை தமிழ்நாட்டில் தடைசெய்யக்கோரி பல்வேறு தரப்பினர் குரலெழுப்பி வந்தனர். பாண்டிச்சேரியில் இனம் படத்தை திரையிட முடியாத அளவுக்கு மோதல் எழுந்தது.
இனம் படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்த தயாரிப்பாளரும் இயக்குநருமான லிங்குசாமி தமிழ் ஆர்வர்களின் எதிர்ப்பை ஆரம்பத்தில் சட்டை செய்யவில்லை. தற்போது போராட்டம் தீவிரமடையயே வேறு வழியில்லாமல், இன்று முதல் தமிழகத்தின் அனைத்து திரையரங்கங்களில் இருந்தும் இனம் திரைப்படம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார் லிங்குசாமி.
தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்... இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும், தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன். தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அடிப்படையில், சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.
அப்படி ஒரு சினிமா நேசனாகவே இனம் படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன். அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான். ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன். எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க இனம் படத்தை நான் நிறுத்துகிறேன். திருப்பதி பிரதர்ஸ் சார்பாக வெளியிடப்பட்ட இனம் திரைப்படம் இன்று முதல்(31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும். இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்.
- என்று லிங்குசாமி குறிப்பிட்டுள்ளார்.