விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலுமகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படம் வண்ண வண்ணப்பூக்கள். இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக வினோதினி, மெளனிகா இருவரும் நடித்திருந்தனர். அதன்பிறகுதான் பாலுமகேந்திரா, மெளனிகாவுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இணைந்து வாழ்ந்து வந்தனர்.
ஆனால் சமீபத்தில் பாலுமகேந்திரா இறந்தபோது அவரை பார்க்க மெளனிகாவுக்கு அனுமதியளிக்கவில்லை. அப்போது டைரக்டர் பாலா அவரை ஆள் வைத்து அடிக்க முயற்சி செய்ததாக தற்போது மெளனிகா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி மெளனிகா கூறுகையில், பாலுமகேந்திரா இயக்கத்தில் நடித்தபோது நான்தான் அவரை முதலில் காதலித்தேன். அவர் மறுத்தபோதும் பின்னர் ஏற்றுக்கொண்டார். அதோடு, சிவன் கோயிலில் வைத்து எனக்கு தாலி கட்டி என்னை மனைவியாக்கிக்கொண்டார். அந்த வகையில் நாங்கள் இருவரும் 28 வருடங்களாக வாழ்ந்துள்ளோம்.
அப்படியிருக்க, பாலுமகேந்திரா இறந்தபோது அவரை பார்க்க என்னை அனுமதிக்காமல் டைரக்டர் பாலா தடுத்தார். என் கணவரை பார்க்கக்கூடாது என்று என்னை தடுப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. மேலும், எனக்கும், பாலுமகேந்திராவுக்குமிடையே தவறான உறவு இருந்திருந்தால் அவர் உயிரோடு இறந்தபோதே அவரிடமிருந்து என்னை பிரிக்க முயற்சி எடுத்திருக்கலாமே. அப்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் கேள்வி கேட்டுள்ளார் மெளனிகா.