விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சமீபகாலமாக எந்த படமாக இருந்தாலும் டாஸ்மாக் காட்சிகளே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் முன்னணி ஹீரோக்களே அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதால் இளைய சமுதாயம் கெட்டுப்போக வழிவகுக்கிறது என்று சென்னையில் நடைபெற்ற வீரன் முத்து ராக்கு படத்தின் ஆடியோ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் வருத்தத்துடன் பேசினார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், சினிமாக்களில் டாஸ்மாக் காட்சி இடம்பெறுவது தப்பில்லை. ஆனால், சமீபகால படங்களில் அளவுக்கதிகமாக உள்ளது. அதிலும் விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில்கூட அந்த மாதிரி காட்சிகள் அதிகமாக இடம்பெறுகிறது.
சாதாரணமாக தங்களது அபிமானத்திற்குரிய ஹீரோக்கள் படங்களில் அணிந்து நடிக்கும் காஸ்டியூம்கள் மட்டுமின்றி அவர்களது ஹேர் ஸ்டைலைகூட இன்றைய இளைய சமுதாயத்தினர் அப்படியே பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அந்த ஹீரோக்கள் டாஸ்மாக் காட்சிகளில் நடிப்பதைப்பார்த்து அதையும் பின்பற்றுகிறார்கள். ஆக சினிமாவில் காட்டும் கெட்ட விசயங்கள் ரசிகர்களை தவறான வழிக்கு திசை திருப்பி விடுகிறது.
இதனால் சமுதாய அக்கறை உள்ள முன்னணி ஹீரோக்கள் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பேசிய கே.ராஜன், சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு மாதிரியான நல்ல படங்களை ரசிகர்கள் வரவேற்க வேண்டும் என்றார்.