விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பரதேசி படத்திற்கு பிறகு பாலா டைரக்ட் செய்யப்போகும் படம் கரகாட்டக் கலை தொடர்பானது. சினிமா வருவதற்கு முன்பு மக்களை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த கரகாட்டக் கலையின் இன்றைய நிலையை காட்டும் படமாக பாலா இதனை உருவாக்க இருக்கிறார். இளையராஜா இசையில் 6 பாடல்களை வாங்கி விட்டார். ஒளிப்பதிவாளர் செழியன் 5டி டிஜிட்டல் கேமராவை எடுத்துக் கொண்டு கரகாட்ட கலைஞர்கள் அதிகமாக வாழும், தஞ்சாவூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை பகுதிக்கு சென்று அவர்களின் நிஜ வாழ்க்கையை படம்பிடித்து வருகிறார்.
இதில் இன்னொரு சிறப்பு வரப்போகிறது. அது முதன் முதலாக சசிகுமார் தாடி இல்லாமல் மொழு மொழு முகத்துடன் நீண்ட தலைமுடியுடனும் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஸ்ரேயாவிற்கு கரகாட்டம் சொல்லிக் கொடுப்பதற்காக கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர் ஒருவரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே முறைப்படி ஸ்ரேயா நடனம் கற்றவர் என்பதால் வெகு எளிதான கரகாட்டத்தை கற்றுக் கொள்வார் என்கிறார்கள்.