தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
கடந்த 27ந் தேதி பெங்களூரு சென்ற ரஜினி தற்போது அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். படப்பிடிப்புக்கு சென்றிருந்த நண்பர் ராஜ்பகதூரும் நேற்று திரும்பி விட்டார். ரஜினியுடன் கன்னட நடிகர் அம்ரிஷ், துவாரகேஷ், மோகன்பாபு ஆகியோரும் இருக்கிறார்கள். தினமும் ஒரு நண்பர் வீட்டில் இருந்து ரஜினிக்கு சாப்பாடு செல்கிறது.
அரசியல் சந்திப்புக்கு மறுப்பு
ரஜினி பெங்களூருவில் தங்கி இருப்பதை அறிந்த பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் அவரை சந்திக்க முயற்சித்து வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அவரது ஆதரவை பெற்று விட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அரசியலில் ரஜினிக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மரியாதை நிமித்தமாக சந்திக்க விரும்பினர். "தேர்தல் நெருங்கும் நேரத்தில் சந்தித்தால் அது பல சந்தேகங்களையும், குழப்பங்களையும் உண்டாக்கும். நானே உங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வருகிறேன்" என்று கூறி அன்பாக அதை மறுத்து விட்டார்.
மந்த்ராலயமா? கயிலாயமா?
பெங்களூருவில் தற்போது தங்கி ஓய்வெடுத்து வரும் ரஜினி அடுத்து மந்த்ராலயம் செல்வார் என்றும் அங்கிருந்து இமயலையில் உள்ள கயிலாயத்துக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்போதைய பிளான்படி நாளை வரைதான் அவர் பெங்களூருவில் இருப்பார் என்றும் அதன் பிறகு கிளம்பி விடுவார் என்றும் அவர் எங்கு செல்கிறார் என்பதை அவர்தான் கடைசி நேரத்தில் முடிவு செய்வார் என்கிறார்கள். ரஜினி இப்போதைக்கு சென்னை திரும்ப மாட்டார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது என்பகிறது நம்பகமான வட்டார தகவல்கள்.
காரணம் என்ன?
ரஜினி பெங்களூர் செல்வதும், நண்பர்களை சந்திப்பதும் ஒன்றும் புதிதில்லை. ஆனாலும் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சென்னையில் தங்கி இருந்தால் அரசியல்கட்சித் தலைவர்களின் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். அரசியல் கட்சிகளின் நெருக்கடி இருக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்றால் மீடியாக்கள் தேர்தல் பற்றி கேள்வி கேட்கும். இதை தவிர்க்கவே ரஜினி பெங்களூரு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. கோச்சடையான் படம் தொடர்பாக ரஜினி மன உளைச்சலில் இருப்பதாகவும் மன ஆறுதல் மற்றும் மகிழ்ச்சி வேண்டி இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.