மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
புதுமுகம் லோகேஷ் சந்தர் என்பவர் அச்சாணி என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். மறைந்த வேளாண் விஞ்ஞாசனி நம்மாழ்வார் கருத்துக்களை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் விவசாயிகள் தற்கொலையையும் மையமாக கொண்ட படம். ஆனந்த் சம்பத், ராஜேஷ், வெங்கடேசன், பசுமைகுமார் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகளாக நடித்திருக்கிறார்கள். ஹீரோயின் இல்லை. ரூபன் இசை அமைத்திருக்கிறார். கிரி, ரமேஷ், ராஜேந்திரன் ஆகியோர் கேமராமேனாக பணியாற்றி உள்ளனர்.
"கடும் போராட்டங்களுக்கு இடையில் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். அழிந்து வரும் விவசாய தொழிலை காப்பாற்றும் முயற்சியாக இது தயாராகி உள்ளது. மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை சந்தித்து எதிர்கால விவசாயம் பற்றி அவருடன் பேசி, அவர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றை விவசாயிகளின் நிலை, தற்கொலை வரை அவர்களை கொண்டு செல்லும் கடன், ஆகியவை பற்றியும் படம் பேசுகிறது. மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்கிறார் டைரக்டர் லோகேஷ் சந்தர்.