மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிம்புவும் நயன்தாராவும் மன்மதன் காலத்தில் காதல் வயப்பட்டுக் கிடந்தார்கள். பட விளம்பரத்துக்காக நயன்தாரா உதட்டைக் கடித்து அதனை போஸ்டராக ஒட்டியபோதுகூட நயன்தாரா பொறுத்துக் கொண்டார். காரணம் அது சினிமா புரமோஷன். சின்ன கருத்து வேறுபாட்டுடன் இருந்த போது தனிமையில் எடுத்துக் கொண்ட லிப் லாக் கிஸ்சை நெட்டில் பரப்பிவிட்டது சிம்புதான் என்று கருதி காதலுக்கு கத்தரி போட்டார்.
பின்னர் நயன்தாரா, பிரபுதேவாவை காதலித்தார், கையில் பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு தீவிரமாக காதலித்தார். சிம்பு, ஹன்சிகாவை காதலித்தார். இப்போது இரண்டு பேரின் இரண்டாவது காதலும் பிரச்னையில் இருக்க இவர்கள் இப்போது ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். அது சிம்புவின் சொந்தப் படம். "நான் கேட்ட சம்பளத்தை கொடுத்தாங்க நடிக்கிறேன். மற்றபடி இதில் எதுவும் ஸ்பெஷல் இல்லை" என்றார் நயன்தாரா.
பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கடந்த ஒரு வாரமாக நடித்து வருகிறார் நயன்தாரா. அவரது தனி போர்ஷனை எடுத்தார்கள். அமெரிக்காவுக்கு முக்கிய வேலையாக சென்றிருந்த சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். பின்னர் அவர் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பங்களாவில் நடந்த படப்பிடிப்பில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தார்.
இது நடந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் சிம்புவும் நயன்தாராவும் சூட்டிங் ஸ்பாட்டில் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் படம் நெட்டில் வெளியிடப்பட்டு. அவர்கள் இருவருக்கும் இரண்டு நாட்களிலேயே மீண்டும் காதல் திரும்பி விட்டதைப்போல செய்தி பரப்பப்பட்டு விட்டது.
படப்பிடிப்பு முடிந்து ஜெயம் ராஜா டைரக்ஷனில், ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நடிக்க பெங்களூருக்கு சென்று விட்டார் நயன்தாரா. அவருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. "யாருடன் நயன் நடித்தாலும் அவர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருப்பார். அப்படித்தான் அந்த ஹீரோவுடனும் பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் இந்தப் படத்தை வெளியிட்டிருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். இதுவே கூட ஒப்பந்தத்தை மீறிய செயல்தான். பட புரமோசனுக்காக தனிப்பட்ட முறையில் மேடத்தை பயன்படுத்திக் கொள்ள கூடாது என்பது ஒப்பந்தத்தில் ஒன்று. ஆரம்பத்திலேயே இப்படி என்றால் போக போக என்னவெல்லாம் நடக்குமோ என்று மேடம் கவலையில் இருக்கிறார்" என்கிறார்கள் நயனுக்கு நெருக்கமான ஒருவர்.