மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அடுத்த படத்தைப்பற்றியே விஜய்-அஜீத் ஆகியோர் யோசிப்பார்கள். ஆனால், இப்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அதற்கடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்களுக்கான கதையை கேட்டு முடிவெடுத்து விடுகிறார்கள்.
அப்படித்தான் ஜில்லாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பதாக அறிவித்தார் விஜய். இந்த நிலையில், அந்த படத்தை முடித்ததும் தனது மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் படத்தில் நடிக்கப்போவதாகவும் இப்போது தெரிவித்துள்ளார். அப்படத்தில்கூட தமிழன் படத்தில் விஜய்யுடன் நடித்த பிரியங்கா சோப்ரா மீண்டும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் அஜீத்தும் இப்போது வேகத்தை கடைபிடிக்கத் தொடங்கி விட்டார். ஆரம்பம் படத்தில் நடித்து வந்தபோதே, அதற்கடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக சொன்னவர், இப்போது அவர் இயக்கியுள்ள வீரமும் வெளியாகியிருக்கிற நிலையில், அடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார்.
ஆனால், அப்படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த், ரஜினிக்காக தயார் செய்திருக்கும் கதையில் நடிக்கப்போவதாக முன்பு கூறிவருபவர், அதையடுத்து, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கும் படத்திலும் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஆக, ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அதன்பிறகு நடிக்கயிருக்கும் 2 புதிய படங்களையும், விஜய்-அஜீத் இருவருமே அறிவித்து வருகிறார்கள்.
ஆக, இதே வேகத்தை தொடர்ந்தால், வருடத்துக்கு 3 படம் தலயும், தளபதியும் கொடுத்து விடுவார்கள் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.