மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஆர்யா, நயன்தாரா, ஜெய்., நஸ்ரியா நடித்த படம் ராஜாராணி. அட்லீ இயக்கி இருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். படம் வெளியாகி 100 நாட்கள் ஓடி வெற்றி விழாவையும் கொண்டாடி விட்டார்கள். இந்த நிலையில் படத்துக்கு தடைகேட்டு ஈரோடு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் குமாரவலசு பகுதியை சேர்ந்த ஆர்.சிவகுமார் என்பவர் ஏர்வாய்ஸ் இன்போகாம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்தான் படத்துக்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
"நான் ஏர்வாய்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன், ஏர்வாய்ஸ் என்ற வர்த்தக குறீயிட்டை 2006ம் ஆண்டே பதிவு செய்து வைத்திருக்கிறேன். என் கம்பெனி பெயரை ராஜாராணி படத்தில் பயன்படுத்தி உள்ளனர். படத்தில் வரும் கேரக்டர்கள் என் கம்பெனி பெயரைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். ஏர்வாய்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டை குறைகூறும் காட்சிகளும் உள்ளது. இது என் கம்பெனியின் இமேஜை பாதித்துள்ளது. ஏர்வாய்ஸ் பெயரை பயன்படுத்த என்னிடம் அனுமதியும் பெறவில்லை. எனவே ராஜாராணி படத்தை தியேட்டர்களில் டிவிடிக்களில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடைவிதிக்க வேண்டும்" என்று தனது மனுவில் சிவகுமார் கூறியுள்ளார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ நிறுவனம், நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.