ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் சட்டம் அதை தடுத்துக்கொண்டேயிருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் தனித்து தங்கியிருந்தபோது மர்ம மனிதன் ஒருவனால் தாக்கப்பட்டார். அதையடுத்து அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அதனால் இப்போது அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்திருப்பதோடு, தனக்கென தனி செக்யூரிட்டியையும் பலப்படுத்தியிருக்கிறார் அவர்.
இதையடுத்து அவர் கூறுகையில், என்னதான் போலீஸ் இருக்கிறது என்றாலும், அதை நம்பி பெண்களால் தனித்து வாழ முடியவில்லை. என்னைப்போன்று தனித்து வாழும் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அனுபவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். காரணம், இந்தியாவில் இன்னமும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்புகள் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
அதனால்தான், நான் என்னை பாதுகாத்துக் கொள்ள தனியார் செக்யூரிட்டியை நியமித்திருக்கிறேன் என்று சொல்லும் ஸ்ருதிஹாசன், இந்த பிரச்னைக்காக நான் என் அம்மா சரிகாவுடன் செல்ல விரும்பவில்லை. காரணம், அப்படி சென்றால் இந்த சம்பவத்துக்கு பிறகு நான் பயந்து விட்டது போலாகி விடும். அதேசமயம் இனிமேல் அதிக எச்சரிக்கையுடன் இருப்பேன் என்கிறார்.