ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. ரஜினியின் நெருங்கிய நண்பர். மோகன்பாபு திருப்பதியை சுற்றி நிறைய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது கல்வி சேவையை பாராட்டி மத்திய அரச அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
மரியாதைக்குரிய இந்த விருதை தனது அரசியல் செல்வாக்கிற்கும், கல்வி நிறுவனங்களை வளர்ப்பதற்கும் மோகன்பாபு தவறாக பயன்படுத்துகிறார் எனவே அந்த விருதை அவரிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களுடன், இந்திரசேனா ரெட்டி என்பவர் ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம். மோகன்பாவுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெறுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மோகன்பாவு முடிவு செய்துள்ளார்.