மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
துபாய் தமிழ் எழுத்தாளரும், தொழில் அதிபருமான கஸாலி, தனது சகோதரர்கள் தயாரிப்பில் ஹெச் 3 சினிமாஸ் என்ற நிறுவனம் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் ''சாய்ந்தாடு சாய்ந்தாடு''.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, பிரசாத் லேப் பிரிவியூ திரையரங்கில், இதுநாள் வரை இசை வெளியீடுகளில் இல்லாத புதுமையாக வெகு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் நடந்தது. அதாகப்பட்டது, இசை வெளியீடு என்றாலே பாடல் காட்சிகளை திரையிடுவது... டிரைலர் வெளியிட்டு திரையில் காட்டுவது... என வழக்கமான சினிமா விழாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, படத்தில் இடம்பெறும் பாடல்காட்சி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நடக்குழுக்களை அமைத்து மேடையில் ஆடவிட்டு அசத்தினார்கள். அதிலும் இயக்குநரே எழுதிய அரபிக்குதிரை என்ற பாடலுக்கு அரேபிய பாணியில் நடனம் அமைத்திருந்தது அபாரம்!
இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்கதலைவர் கேயார் பேசும்போது... முன்பு கலைஞர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கமாட்டார்கள். ஆனால் எது எல்லாம் எம்.ஜி.ஆர். திரைத்துறைக்கு வருவதற்கு முன். அவர் வந்தபிறகுதான் கலைஞர்களும், சமுதாய பொறுப்பு மிக்கவர்கள் எனும் எண்ணம் மக்களுக்கு வந்தது. அது மாதிரி 'சாய்ந்தாடு சாய்ந்தாடு' படத்திலும் சமுதாயத்திற்கு தேவையான கருத்தொன்றை சொல்லி, மருத்துவத்துறை அவலம் ஒன்றை சுட்டிக்காட்டி, சமூக விழவிப்புணர்வோடு படம் இயக்கி இருக்கிறார் கஸாலி. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மேலும் வளைகுடா தொழிலதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர் இங்கும் இருக்கும் சிறிய தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து படங்கள் தயாரித்து அவர்களுக்கும் லாபத்திலும் ஒரு பங்கு கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தமிழ் திடைரப்படக் கலைஞர்களை வளைகுடா நாடுகளுக்கு அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். அப்போது உருவானது தான் சினிமா தயாரிக்கும் ஆர்வம். இந்தப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து 5 படங்கள் தயாரிக்க இருப்பதாகவும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் மேலும் பல தொழில்அதிபர்களை தமிழ் திரைப்பட தயாரிப்புக்கு கொண்டு வரவுள்ளதாகவும் முன்னதாக வரவேற்புரை ஆற்றிய இப்படத்தயாரிப்பாளர் கே.எம்.ஜெகபர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
படக்குழுவினருடன் இசை விழாவில் தயாரிப்பாளர்கள் கேயார், டி.சிவா, இயக்குநர் சமுத்திரகனி, நடிகர் சுப்பு பஞ்சு உள்ளிட்டவர்களுடன் போலீஸ் அதிகாரி ரவியும் கலந்து கொண்டு 'சாய்ந்தாடு சாய்ந்தாடு' ஆடியோ சி.டி.யை வெளியிட்டு மிகழ்ந்தனர்!