மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்திய திரைப்பட வர்த்தசபை சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் கோடிக் கணக்கில் அதற்கு சொத்து இருக்கிறது. இந்த சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் கல்யாண் சேம்பர் தலைவராக இருக்கிறார். இவரது தலைமையிலான நிர்வாகிகளின் பதவிகாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே முடிந்து விட்டது. அதன் பிறகு தேர்தல் நடத்தவில்லை.
சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். சங்கத்தின் இரண்டாவது கட்டடத்தை கட்டி முடிக்க வேண்டியது இருக்கிறது என்ற காரணங்களை சொல்லி தேர்தலை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்கள். இந்த நிலையில் எஸ்.எஸ். மூவீஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சேம்பர் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று கோரி உள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற ஜனவரி 3ந் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு சேம்பருக்கு உத்தரவிட்டுள்ளது.