விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
புதுமுக இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், பாலாஜி, ஜெய் குகேனி நடித்துள்ள படம் மெய்யழகி. அக்கா-தம்பி இடையே உள்ள பாசப்போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆர்.பி.செளத்ரி, விக்ரமன், தேவயானி, மதன்பாபு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டனர். விழாவில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் திரையிடப்பட்டன. அதில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பாலாஜி. அவரது நடிப்பை பார்த்துவிட்டு மேடையிலேயே ஏராளமானபேர் பாலாஜியை பாராட்டினர்.
விழாவில் பேசிய தேவயானி, பாலாஜியின் நடிப்பை பார்த்துவிட்டு மிரண்டு போய்விட்டேன். உண்மையாக உடல்நலம் சரியில்லாத பையன் படத்தில் நடித்திருப்பது போன்று தோன்றியது. நான் அழுது ரொம்ப நாளாகிவிட்டது, ஆனால் பாலாஜியின் நடிப்பையும் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பார்த்துவிட்டு என்னை அறியாமலயே கண்கலங்கிவிட்டேன். அந்தளவுக்கு அவரது நடிப்பு என்னை பாதித்துவிட்டது. அவர் இன்னும் பல உயரங்கள் போக நான் வாழ்த்துகிறேன். இப்போது வரும் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள், தண்ணி அடிக்கும் காட்சிகள், பெண்களை தரக்குறைவாக பேசும் காட்சிகள் தான் அதிகமாக இடம்பெறுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபட்ட படம் மெய்யழகி. சின்ன பட்ஜெட்டுல ரொம்ப நல்ல படத்தை கொடுத்திருக்காங்க. இதுபோன்ற படங்களுக்கு பத்திரிகையாளர்கள் ரொம்ப சப்போர்ட் பண்ணனும் என்று கேட்டு கொண்டார் தேவயானி.