ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கில் ஹிட்டான ஆலாம் மொதலந்தி தமிழில் என்னமோ ஏதோ என்ற டைட்டிலில் ரீமேக் ஆகிறது. இதனை ரவிபிரசாத் புரொடக்ஷன் தயாரிக்கிறது. கவுதம் கார்த்திக் ஹீரோ, நிகிஷா படேல், ராகுல் ப்ரீத்தி ஆகியோர் ஹீரோயின்கள். இந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களிடையே ஈகோ பிரச்னை இருந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரவி தியாகராஜன் கூறியதாவது: "படத்தில் நடித்த ஒரு நிமிடம்கூட அவர்களுக்குள் எந்த ஈகோவும் வந்ததில்லை. இருவருக்குமே தெலுங்கு தெரியும் என்பதால் தங்கள் கேரக்டர் என்ன அதில் தங்கள் பங்கு என்ன என்பதும் நன்றாக தெரியும். அதனால் ஈகோ என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்றார்.
கவுதம் கார்த்திக் கூறியதாவது: "இரண்டு ஹீரோயின்களுடன் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இரண்டு பேருடனும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி இருக்கிறது. அப்பா மாதிரி காதல் மன்னன் ஆகும் விருப்பம் இல்லை. எல்லாவிதமான கேரக்டரிலும் நடிக்க வேண்டும். கடல் படம் தோல்வி பற்றி கவலைப்படவில்லை. மணிரத்தினம் சார் மூலம் அறிமுகமானதே பெரிய பாக்கியம் என்றார்.