ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
நடிகர் அஜீத், தன் வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டி தருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். தான் மட்டுமல்லாது தன்னை சார்ந்து இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர். அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜீத், தன் வீட்டில் நீண்டகாலமாக வேலை செய்யும் 10 பேருக்கு வீடு கட்டி கொடுக்கிறார். இதற்காக மாமல்லபுரத்தை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் தனியாக நிலம் வாங்கி, அதில் இந்த 10பேருக்கும் வீட்டு கட்டி கொடுக்கிறார். சமீபத்தில் இதற்கான பூமி பூஜை நடந்துள்ளது. ஷூட்டிங்கிற்காக அஜீத், ஐதராபாத் சென்றதால் இந்த பூமி பூஜையில் பங்கேற்கவில்லை. ஆனால் அவருக்கு பதில் அவரது மனைவி ஷாலினி பங்கேற்றார்.
முன்பு ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த், அவரது வேலையாட்களுக்கு இதேபோன்று வீடு கட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.