ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றபோதும், தமிழ் சினிமா ப்ரியாமணியை கண்டுகொள்ளவில்லை. அதனால் தனது திறமையை முன்வைத்து அக்கம் பக்கத்து மாநிலங்களில் சான்ஸ் கேட்டுப்பார்த்தார். ஆனால், இவரை ஏறஇறங்கப்பார்த்த படாதிபதிகள் கவர்ச்சி கோதாவில் இறக்கி விடவே முன்வந்தனர். அதனால் தேசிய விருது நடிகை என்ற பந்தாவையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு பிழைக்கிற வழிக்கு நல்ல பிள்ளையாக மாறினார்.
அதனால் திறமைக்கு சான்ஸ் கேட்டு சென்ற இடத்தில் உடம்பைக்காட்டி நடித்து சில வருடங்களாக காலம் தள்ளினார் ப்ரியாமணி. இருப்பினும் இப்போது தெலுங்கு, கன்னட மொழிகளில் அவரது கவர்ச்சிக்கு இருந்த மவுசும் குறைந்து விட்டதாம். அதனால் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்துப்பாட்டு நடிகையாக உருவெடுத்த அவர், அடுத்து வில்லி மற்றும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை, தன்னை புறக்கணித்த கோடம்பாக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் ப்ரியாமணி. அதோடு, அப்படி நான் நடிக்கிற நெகடிவ் ரோல்களுக்கு நான்தான் டப்பிங் பேசுவேன். ஏன்னா என் குரல் வில்லிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் என்றும் கம்பீர குரலில் பேசுகிறாராம் ப்ரியாமணி.