சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
‘‘யோகி’’ படத்தில் ஹீரோவாக நடித்த அமீர் அதன்பிறகு கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா பாட்டுக்கு ஆடினார். இப்போது மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ‘‘கொள்ளைக்காரன்’’ படத்தை இயக்கிய சந்திரன் அடுத்து இயக்கும் ‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’’ படத்தில் அமீர் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தற்போது 555 படத்தில் பரத்க்கு ஜோடியாக நடிக்கும் மிருத்திகா. ‘ஆடுகளம்’ நரேன் வில்லன். எப்போதும் தாடியுடன் காட்சி தரும் அமீர், ‘‘பேரன்பு கொண்ட பெரியவர்களுக்காக’’ தாடியை எடுத்துவிட்டார். "நடுத்தர வயது அமீருக்கும் இளம் பெண் மிருத்திகாவுக்கும் வரும் காதலும் அந்த காதலால் வரும் குழப்பமும், அந்த குழப்பத்தை தீர்க்க உதவும் காட்சிகளும் காமெடியாக இருக்கும். அமீர் அண்ணனுக்கு இந்தப் படம் பெரிய டர்னிங்பாயிண்டா இருக்கும்" என்கிறார் இயக்குனர் சந்திரன்.