மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் நடித்த திருமலை, ஆதி, தனுஷ் நடித்த சுள்ளான் படத்தை இயக்கியவர் ரமணா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தனது பேசும் சக்தியை இழந்த அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்ததால் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரது வாய்ஸ் பாக்ஸ் அகற்றப்பட்டுவிட்டதால் பூரண குணம் அடைந்திருக்கிறார். ஆனாலும் முன்புபோல பேசும் தன்மையை இழந்திருக்கிறார்.
தொண்டையில் ஒரு ரூபாய் அளவிக்கு துவாரம் போடப்பட்டுள்ளது. அதை கையால் மூடிக்கொண்டு மெல்லிய கீச்சு குரலில் பேசுகிறார்.
மரணத்தை வென்றுள்ள ரமணா விரைவில் படம் இயக்க இருக்கிறேன். இதற்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணியைத் துவக்கி விட்டேன். "விஜய், பிரகாஷ்ராஜ் போன்ற நல்ல நண்பர்களால் நான் மீண்டு வந்திருக்கிறேன். என் மனைவி என்னை தாய்போல கவனித்துக் காப்பாற்றினார். எனது 40 வருட வாழ்க்கை அனுபவத்தை இந்த இரண்டு வருடம் புரட்டிப்போட்டு விட்டது. எல்லாவற்றிலிருந்தும் மீட்ட கடவுளுக்கு நன்றி மீண்டும் சினிமாவுக்கு வருகிறேன்" என்கிறார் ரமணா.