ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

சென்னையில் நடந்த 'இரவின் விழிகள்' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சங்க செயலாளர் பேரரசு ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்தார். அவர் பேசுகையில், ''இன்று படங்கள் வெற்றி பெறுவது குறைந்துவிட்டது. சினிமாவை அழிப்பது சுயநலம்தான். சினிமா நல்லா இருக்கணும் என்று தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் நினைக்கணும்.
சின்ன படங்கள் ஓடணும், புதுப்படங்கள் ஓடணும் என்ற விஷயத்தில் ரஜினிகாந்த்துக்கு ஒரு பார்வை உண்டு. அப்படிப்பட்ட படங்கள் ஓடினால், அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறார் ரஜினிகாந்த். அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அந்த படம் ஓட உதவி செய்கிறார். இப்போது அல்ல, முன்பே அவருக்கு அந்த குணம் உண்டு. தனது பட வெற்றிவிழாவில் சேரன் இயக்கிய 'பொற்காலம்' படத்தை பாராட்டி, அவருக்கு செயின் போட்டார். அப்படிப்பட்ட உள்ளம் அவருக்கு உள்ளது.
அவரை போல முன்னணி ஹீரோக்கள் தங்களுக்கு பிடித்த நல்ல படங்களை பாராட்டலாம். அவர்களை நேரில் அழைத்து பாராட்டாவிட்டால், அந்த படம் குறித்து ஒரு பதிவு போடலாம். அது படத்தை ஓட வைக்கும். நாம் சம்பாதித்துவிட்டோம், நாம் வளர்ந்துவிட்டோம் என நினைக்காமல் நல்ல புதுப்படங்களுக்கு ஆதரவு கொடுத்து, அதை ஓட வைக்கலாம். இப்போது பல படங்கள் நன்றாக இருக்கிறது என்று ரிசல்ட் வருகிறது. ஆனால், வசூல் இல்லை. ஆகவே, சினிமாவை வாழ வைக்க இதை சேவையாக பெரிய ஹீரோக்கள் செய்யலாம்'' என்றார்.




