தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கர்நாடக மாநிலத்தில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் எப்போதுமே மிக அதிகமாக இருக்கும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 800, 900, 1000 என்று கூட டிக்கெட் கட்டணங்கள் உண்டு.
அவற்றை முறைப்படுத்தி சில வாரங்களுக்கு முன்பு புதிய உத்தரவு ஒன்றை கர்நாடக மாநில அரசு பிறப்பித்தது. அதன்படி அதிகபட்ச கட்டணமாக ரூ 200 என நிர்ணம் செய்தது. 75 இருக்கைகள் கொண்ட பிரிமியர் தியேட்டர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஆணை பிறப்பித்தது.
இருந்தாலும் பிவிஆர் சினிமாஸ் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கத்தினர் கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் அரசின் உத்தரவுக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.
இதைத் தொடர்ந்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மீண்டும் அவர்களது விருப்பம் போல சினிமா டிக்கெட் கட்டணதை வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்த 'ஓஜி', அடுத்த வாரம் ரிஷப் ஷெட்டி நடித்த கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்கள் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால் பயன்பெறக் கூடிய முக்கிய படங்களாக இருக்கும்.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநில அரசு மேல்முறையீடு செய்யுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.