நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே வெளியாகி பாராட்டுகளை பெற்ற படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படம் செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த பட இயக்குனர் விஷால் வெங்கட் இயக்க, அர்ஜூன்தாஸ் நடித்த 'பாம்' படம் நாளை (செப்.,12) வெளியாக உள்ள நிலையில், அடுத்த வாரமே அவர் இயக்கிய படம் ரிலீஸ் ஏன்? வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாத படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. அப்படி இருக்க, செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் செய்ய காரணம் என்ன? ஏதாவது அரசியலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.