திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி மற்றும் பலர் நடித்து 2022ம் வருடம் வெளிவந்த படம் 'பாபா'. இப்படத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாரம் டிசம்பர் 10ம் தேதி மறு வெளியீடு செய்ய உள்ளார்கள்.
அதற்காக தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடைபெறுகிறது. சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பாபா' வெளிவந்த 2002ம் ஆண்டில் அதிகாலை காட்சிகள் என்பது நடைமுறையில் இல்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ஒரு படத்திற்கு அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல் என்பது வியப்பான ஒன்றுதான்.
இந்த வாரம் பல புதிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் அவற்றிற்குக் கூட அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெறவில்லை. ஆனால், 'பாபா' படத்திற்கு அதிகாலை காட்சி, அதுவும் ஹவுஸ்புல் என்பதை திரையுலகினரும், ரசிகர்களும் அதிசயத்துடன் பார்க்கிறார்கள்.