சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஒரு இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'காட்டி' திரைப்படம் நாளை பான் இந்தியா வெளியீடாக வருகிறது. கிரிஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய், சைதன்ய ராவ் மடாடி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் புரமோஷனுக்கு வருவதை அனுஷ்கா முழுவதுமாக தவிர்த்துவிட்டார். நேரில் வருவதற்கு அவர் ஏன் இவ்வளவு தயங்குகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், படம் குறித்து பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் மட்டும் பேசி பேட்டி கொடுத்துள்ளார். மேலும், நேற்று ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் சாட்டிங் செய்துள்ளார்.
அனுஷ்கா புரமோஷனுக்கு வராததை படக்குழுவும் குறையாக சொல்லவில்லை. படத்தின் இயக்குனர் கிரிஷ் கூட அது அனுஷ்காவின் விருப்பம் என்று சொல்லிவிட்டார். நேற்றைய எக்ஸ் சாட்டிங்கில் “படத்தின் கதையைக் கேட்டதும் பிரமித்துப் போய் விட்டேன். யெஸ் என்றோ, நோ என்றோ முதலில் சொல்லவில்லை,” என படம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்குப் பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.




