நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மிகவும் சோகமான கதை 'நல்லதங்காள்' என்கிற நாட்டுப்புற கதை. தனது 7 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணின் சோக கதை அது. இந்த கதை திரைப்படமாக வந்தபோது தியேட்டருக்கும் வெளியேயும் கேட்டதாம் பெண்களின் அழுகை குரல்.
அதே மாதிரியான இன்னொரு படம் 'பெண் மனம்'. 1952ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எஸ்.சவுந்தர்ராஜன் என்பவர் இயக்கினார். டி.கே. சண்முகம், வி.கே. ராமசாமி, எஸ்.ஏ. நடராஜன், எம்.வி. ராஜம்மா, எம்.என். ராஜம், மேனகா, சி.டி. ராஜகாந்தம், கே.எஸ். அங்கமுத்து, முத்துலட்சுமி, புலிமூட்டை ராமசாமி, மற்றும் கோட்டபுலிக் ஜெயராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
தஞ்சையை சேர்ந்த ஏழை விவசாயி பரமசிவம்(டி.கே.சண்முகம்), அவரது மனைவி மீனாட்சி (எம்.வி.ராஜம்மா). இவர்களுக்கு 3 குழந்தைகள், விவசாயம் பொய்த்து வறுமை ஏற்படுகிறது. இதை சமாளிக்க முடியாமல் யாரிடமும் சொல்லாமல் இலங்கைக்கு சென்று விடுகிறார் பரசிவம், அங்கு ஒரு நாடக கமபெனியில் சேர்ந்து வாழ்கிறார்.
குழந்தைகளுடன் தனித்து விடப்பட்ட மீனாட்சி கொடூரமான வாழ்க்கை வாழ்கிறார். ஒரு குழந்தையும் இறந்து விடுகிறது. மீனாட்சியை ஊர் மக்கள் இழிவாக பேசுகிறார்கள். இதனால் நல்ல தங்காள் போன்று குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போது ஒரு சாது அவர்களை காப்பாற்றி அவரவணைக்கிறார்.
இதற்கிடையில் இலங்கை சென்ற பரமசிவம் அங்கு ஒரு பணக்காரின் மகளை காப்பாற்றியதால் அவருக்கு பெரும் தொகை பரிசாக கிடைக்கிறது. அந்த பணத்துடன் குடும்பத்தை தேடி வருகிறார். ஆனால் குடும்பம் எங்கே இருக்கிறது. என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்களை தேடி அலைகிறார் . கண்டுபிடித்தாரா குடும்பத்துடன் சேர்ந்தாரா என்பது படத்தின் கதை.
கேட்கும்போதே கண்ணீரை வரவழைக்கும் கதை. அன்றைக்கு பெண்களை கதறவிட்டதில் வியப்பில்லை.