நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவிதேவன் இயக்கி உள்ள படம் 'சிங்கா'. இதில் ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி.மதியழகன், தித்திர் பிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். அம்ரிஷ் இசை அமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயகுனர் ரவிதேவன் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழு நீளத் திரைப்படமாக தயாராகிறது. விலங்கு நல வாரியத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இப்படத்தை உருவாக்கி வருகிறோம். பலருக்கு கதை பிடித்தபோதும், நிஜ சிங்கத்துடன் நடிக்க தயங்கினர். ஆனால் ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.
எதிர்மறை பெண் கதாபாத்திரம் 300 ஓநாய்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு உகந்த, பயப்படாத நடிகையை கடுமையான தேடலுக்கு பிறகு கண்டறிந்தோம். 1945, பொதுநலன் கருதி மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்த லீஷா எக்லேர்ஸ் இந்த வேடத்தை திறம்பட செய்துள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜாம்பியா, கோவா, தென்காசி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பான் - இந்தியா திரைப்படமாக தயாராகி வரும் இப்படத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிப்பார்கள். என்றார்.